புதிய கல்விக்கொள்கை திட்டத்தை எளிமையாக்க UGC வேண்டுகோள்!


புதிய கல்விக்கொள்கையின் அம்சமான ஒரே நேரத்தில் இரண்டு பட்டபடிப்புகளை மாணவர்கள் படிப்பதற்கான இரட்டை பட்டப்படிப்பு திட்டத்தை அனைத்து உயர்கல்வி நிலையங்களிலும் அமல்படுத்த வேண்டும் என்றும், அதற்கான நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும் என்றும் யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த முறை தற்போது இந்தியாவின் முன்னணி கல்வி நிலையங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது.


ஒரு டிகிரிக்கான பதிவுகளில் இருந்து பள்ளி இறுதி சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவைகளை வாங்கி இரண்டாவது டிகிரியில் சேர சமர்பிப்பதில் பிரச்சனை உள்ளதால் பல்வேறு மாணவர்களிடத்தில் இருந்து புகார் வந்துள்ளது.


இந்த புகாரை அடுத்து அனைத்து உயர்கல்வி நிலையங்களும் இரட்டை பட்டப்படிப்பு முறையில் மாணவர்கள் சேர தேவையான நடைமுறைகளை எளிமை படுத்த வேண்டும் என்று வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.


இந்த இரட்டை கல்வி முறை என்பது ஏற்கனவே பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் பின்பற்றப்படும் ஒன்றுதான். கடந்த 2020ஆம் ஆண்டு இந்தியாவிற்கான புதிய கல்வி கொள்கையில் இந்த பட்டப்படிப்பு முறையும் இணைக்கப்பட்டிருந்தது.


அதற்காகவே, இந்தியாவின் மூத்த கல்விஅதிகாரிகள், அமைச்சர்கள் உட்பட பல்வேறு நாட்டு உயர்கல்வி நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, இந்தியாவை சேர்ந்த உயர்கல்வி நிறுவனங்களோடு 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்கள் ஒன்றிணைந்து பணிபுரிந்து வருகின்றனர். அது மட்டுமில்லாது 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் இந்தியா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.