உலகின் மிக குளிரான இடம்! -51 டிகிரியிலும் பள்ளி செல்லும் குழந்தைகள்!


உலகின் மிகவும் குளிரான இடம்: 


ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மலைப்பாங்கான பள்ளத்தாக்குகளைத் தவிர, வட இந்தியாவில் உள்ள மக்கள் குறைந்தபட்ச தட்பநிலை ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸை அடைந்து வரும் நிலையில் மிகவும் சிரமப்ப்டுகிறார்கள். உலகில் ஒரு நாட்டில் ஒரு கிராமத்தில் வெப்பநிலை -51 டிகிரியாக உள்ளது. இந்த நிலையில் உலகிலேயே மிகவும் குளிரான இடம் என்ற பெயரையும் பெற்றுள்ளது.


-51 டிகிரி செல்சியஸில் சவால்கள் நிறைந்த வாழ்க்கை


அண்டார்டிகாவுக்கு வெளியே ரஷ்யாவின் சைபீரியாவில் அமைந்துள்ள உள்ளது உலகின் மிக குளிரான இடமான ஓமியாகான் (Oymyakon) கிராமம். இங்குள்ள சராசரி வெப்பநிலை -50 டிகிரி ஆகும். குளிரில், இங்குள்ள மக்களின் நிலை பரிதாபகரமாகிறது. இங்கே எந்த பயிர்களும் வளராத அளவுக்கு இங்குள்ள குளிர் நிலைமை உள்ளது. மக்கள் பெரும்பாலும் மாமிசம் அதாவது அசைவம் சாப்பிடுவதன் மூலம் உயிர்வாழ்கிறார்கள். ரஷ்ய ஊடக அறிக்கைகளின்படி, 1924 ஆம் ஆண்டில், இந்த இடத்தின் வெப்பநிலை -71.2 டிகிரி செல்சியஸாக பதிவு செய்யப்பட்டது.


கிராமத்தின் மக்கள் தொகை 500


2018 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு சுமார் 500 மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் எப்போதும் உறைபனியில் வாழ்கின்றனர் உள்ளனர். முன்னதாக இந்த இடத்தில் உள்ள மக்கள் தொகை 900 என்று கூறப்பட்டாலும், அன்றாட வாழ்க்கை சவால்களுக்கு மத்தியில் இப்பகுதியை விட்டு பலர் வெளியேறினர்.


10 மணிக்கு உதயமாகும் சூரியன்


குளிர்காலத்தில், இங்குள்ள குழந்தைகள் -50 டிகிரி வெப்பநிலை வரை இருந்தால் மட்டுமே பள்ளிக்குச் செல்கிறார்கள். அதனை விட குறைவாக இருக்கும் போது பள்ளிகளும் மூடப்பட்டுவிடும். இங்குள்ள வெப்பநிலைக்கு ஏற்ப குழந்தைகள் பாதுகாக்கப்படுகின்றனர். இதன் காரணமாக, 11 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் குளிரைத் தவிர்ப்பதற்காக மைனஸ் 56 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாக இருந்தால் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். குளிர்காலத்தில் பகல் வெப்பநிலை -45 முதல் -50 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், நிர்வாகம் அனைவருக்கும் வழக்கமான சுகாதார பரிசோதனைகளை நடத்தி வருகிறது.


இங்கே, கலைமான் மற்றும் குதிரை மாமிசத்துடன் கூடவே, ஏராளமான ஸ்ட்ரோக்னினா மீன்களை உட்கொள்கிறார்கள். இங்கு டிசம்பர் மாதத்தில் சூரியன் 10 மணிக்கு உதயமாகிறது. அதனால்தான் சவால் மிக்க வாழ்க்கை முறையினால் மக்கள் தங்களையும், தங்கள் குழந்தைளையும் மிகவும் எச்சரிக்கையாக காப்பாற்ற வேண்டிய தேவை உள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.