திருக்குறள் :
பால் : அறத்துப்பால்
இயல்: பாயிரவியல்
அதிகாரம்: நீத்தார் பெருமை
குறள் : 30
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.
பொருள்:
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.
பழமொழி :
Action speaks louder than words.
சொற்களை விட செயல்கள் வலிமை வாய்ந்தவை.
இரண்டொழுக்க பண்புகள் :
1. சூரியன், மழை, மரம், ஆறு எதுவும் தனக்கென இருப்பதில்லை. அவைகளின் கனி, நீர், ஒளி, வெப்பம் அனைத்தும் பிற உயிர்களுக்கே.
2. இயற்கையை போலவே நானும் தன்னலமின்றி வாழ முயல்வேன்.
பொன்மொழி :
நாம் நமது நேரத்தை செலவிடும் விதம் நாம் யார் என்பதை வரையறுக்கிறது. --ஜோனதன் எஸ்ட்ரின்
பொது அறிவு :
1. இந்தியாவின் பட கேமராவை முதலில் தயாரித்தவர் யார்?
ஆனந்த் ராவ் .
2.கிளிசரைல் மற்றொரு பெயர் யாது ?
நைட்ரோ கிளிசரின்.
English words & meanings :
Pa-le-o-bo-ta-ny - study of ancient plants. பண்டைய தாவரங்கள் குறித்த அறிவியல் படிப்பு
ஆரோக்ய வாழ்வு :
ஒரு டீஸ்பூன் சோம்பு, அரை பட்டை மற்றும் ஒரு தேக்கரண்டி இஞ்சித் தூளை நீரில் கலந்து நன்றாக கொதிக்க வைத்து ஆரியவுடன் பருகவும். வறட்டு இருமலுக்கு இதமாக இருக்கும்.
NMMS Q :
வலுவான இழை __ஆகும்.
விடை: நைலான்
இன்றைய செய்திகள்
02.11.22
* சென்னை மெட்ரோவில் அக்டோபரில் மட்டும் 61.56 லட்சம் பேர் பயணம்.
* மழையால் பாதிப்பு: நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
* தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழையும், சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
* தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் வணிக வரி, பதிவுத் துறைகளின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ரூ.23,066 கோடி கூடுதலாக ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.
* சீன வீரர்களுடனான கல்வான் மோதல் எதிரொலி - வீரர்களுக்கு ஆயுதமின்றி போர் பயிற்சி.
* குஜராத் மோர்பி தொங்கு பாலம் விபத்து: 100 பேர் மட்டுமே நிற்க வேண்டிய இடத்தில் ஒரே நேரத்தில் 500 பேர் வரை அனுமதி அளித்ததே விபத்துக்கு காரணம்.
* சீனாவில் கரோனா கட்டுப்பாடுகளை தாங்க முடியாமல் ஐபோன் ஆலையில் இருந்து ஊழியர்கள் தப்பியோட்டம்.
* சோமாலியாவில் 120 பேர் பலியான பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ சர்வதேச நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
* டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி வெற்றி.
* மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில நீச்சல் போட்டி: சென்னை அணி 'சாம்பியன்'.
* சர்வதேச செஸ் போட்டி: சென்னை வீரர் இளம்பரிதி முதலிடம்.
* பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி 'சாம்பியன்'.
Today's Headlines
* 61.56 lakh people travel in Chennai Metro in October alone.
* Rain affected: Chief Minister Stalin orders immediate relief aid.
* According to the Chennai Meteorological Department, there is a possibility of heavy rain in Tamil Nadu for 5 days and very heavy rain in the next 24 hours.
* In the last 7 months in Tamil Nadu, the revenue of commercial tax and registration departments has been increased by Rs 23,066 crore as compared to last year, Minister P. Murthy has said.
* Echoes of Kalwan conflict with Chinese soldiers - unarmed combat training for soldiers.
* Gujarat Morbi Suspension Bridge Accident: The accident was caused by allowing up to 500 people at a time where only 100 people were supposed to stand.
* Unable to withstand the corona restrictions in China, employees flee from the iPhone factory.
* The somalian president has appealed to the international countries to help the victims of the terrorist attack in Somalia which killed 120 people.
* T20 World Cup: England beat New Zealand
* State Swimming Competition for Differently abled: Chennai Team 'Champion'.
* International Chess Tournament: Chennai player Illamparithi tops.
* French Open Badminton: India's Chadwick-Chirag Shetty pair won the 'Championship'.
Prepared by
Covai women ICT_போதிமரம்
Post a Comment