ஒத்திவைக்கப்பட்ட ஊரகத் திறனாய்வுத் தேர்வு வரும் 17ஆம் தேதி நடைபெறும்!


சென்ற சனிக்கிழமை நடைபெற இருந்த தமிழ்நாடு ஊரக திறனாய்வுத் தேர்வு வேறு தேதிக்கு மாற்றிவைக்கப்பட்டுள்ளது.


அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படும் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வத் தேர்வு புயல் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு ஊரக திறனாய்வு தேர்வு 10.12.2022 சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து தமிழகத்தில் பெய்து வரும் மழை மற்றும் தமிழக பகுதியை ஒட்டி உருவாகியுள்ள புயல் எச்சரிக்கை காரணமாக தற்போது இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், கனமழை எச்சரிக்கை காரணமாக சனிக்கிழமை நடக்கவிருந்த தேர்வு 17.12.2022 அடுத்த சனிக்கிழமை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஊரக பகுதிகளில் உள்ள கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்ஷிப் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் இந்த தேர்வுகளை எழுதி வருகின்றனர். ஊரக பள்ளி மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும் அவர்களை ஊக்குவிக்கவும் இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அவர்கள் கல்வி உதவித்தொகை பெறலாம்.

Post a Comment

Previous Post Next Post

Please Send Your Materials , Guides and Question Papers to thekalvitn.com@gmail.com

 The kalvi telegram group link

Thekalvi.com WhatsApp group link 

NOTE: The Entire Copyright And Credits of the PDF Material, Guide, or Question Paper are Owned by the Respected Owner and author of the Material. We had Uploaded This Only For Educational Purposes.